Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், வி.நகர் ஓம் பழனி பாத யாத்திரை அன்னதானக் குழு பக்தர்கள் சார்பாக 20-ம் ஆண்டு பழனி யாத்திரை செல்கின்றனர்.
இதனை முன்னிட்டு இராசிபுரம் வி.நகர்-2ல் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளியிருக்கும்.
ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கும். உற்சவமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து இராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலிலிருந்து விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரங்கள் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
இந்த சுவாமி திருவீதி உலாவில் பம்பை ஜெண்டை மேளங்கள் முழங்க முருக பக்தர்கள் காவடி எடுத்து ஆடி ராசிபுரம் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் சென்றடைந்தனர்.
இந்த சிறப்பு அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை திருவீதி உலாவை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் தை மாதம் 1-ம் தேதி பழனி பாத யாத்திரை இக்குழுவினர் செல்கின்றனர்.